இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 403 ஆக உயர்வு – அதிர்ச்சியில் மக்கள்!

Friday, April 24th, 2020

கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் மேலும் 30 பேர் இன்றும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என இராணுவத்தளபதி உறுதிபடுத்தியுள்ளார்.

வெலிசர கடற்படை முகாமில் நேற்றைய தினம் 30 பேர் அடையாளம் காணப்பட்டிருந்த நிலையில் இதுவரை குறித்த முகாமில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்கான 60 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.

ஜா – எல சுதவெல்ல பிரதேசத்தில் சிலரை தனிமைப்படுத்தலுக்கு அழைத்து சென்ற வெலிசர கடற்படை வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று பரவியமையை தொடர்ந்து 60 பேருக்கு குறித்த தொற்று பரவியுள்ளதாகவும், பொலநறுவை லங்காபுர பகுதியில் 12 கிராமங்களை சேர்ந்த 6000 குடும்பங்கள் இதனால் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 403 ஆக அதிகரித்துள்ளது மை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே கடற்படை முகாமில் உள்ள இலங்கை கடற்படையின் சிப்பாயுடன் தொடர்புடைய மேலும் பல கடற்படை வீரர்கள் விடுமுறையில் தத்தமது பிரதேசங்களுக்கு சென்றுள்ளதாகவும் இதன் காரணமாக இன்னும் பல தொற்றாளர்கள் இனங்காணப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இவ்வாறு விடுமுறையில் கடற்படை சிப்பாய்கள் சென்றிருக்க வாய்ப்பிருப்பின் அவர்களது உறவுகள் மற்றும் அவர்கள் சென்ற இடங்களில் உள்ளவர்களும் குறித்த தொற்றால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாகவும் சுகாதார தரப்பினர் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

Related posts: