இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் பல மில்லியன்களால் அதிகரிப்பு!
Saturday, January 8th, 2022இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம், கடந்த டிசம்பர் மாத இறுதியில் 3 ஆயிரத்து 137 தசம் 6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரையில் அதிகரித்துள்ளது.
நவம்பர் மாத இறுதியில் இலங்கையின் வெளிநாட்டு ஒதுக்கம் ஆயிரத்து 588 தசம் 4 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது.
இதேநேரம், நவம்பர் மாத இறுதியில், நாட்டின் தங்கத்தின் கையிருப்பின் பெறுமதி 382 தசம் 2 மில்லியன் டொலராக ஆக காணப்பட்டது.
இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாத இறுதியில் தங்கத்தின் கையிருப்பு பெறுமதி 175 தசம் 4 மில்லியன் டொலர் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளது.
இதன்படி, 206 தசம் 8 மில்லியன் டொலர் பெறுமதியான தங்கம், மத்திய வங்கியினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன், தங்கத்தின் கையிருப்பு 54 சதவீதத்தினால் வீழ்ச்சி அடைந்துள்ளதாக மத்திய வங்கியின் புதிய தகவல்களின் மூலம் அறியக்கூடியதாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
அமெரிக்கப் படையால் கொழும்பு துறைமுகத்தில் பாதுகாப்பு இயலுமை விருத்தி செயற்பாடு!
யாழ்ப்பாணத்தில் மத்தியதர குடும்பங்களின் நலன் கருதி வீட்டுத்திட்ட தொகுதி ஆரம்பித்து வைப்பு!
கடந்த வருடத்தில் மாத்திரம் 24 சந்தேகநபர்கள் பொலிஸ் பாதுகாப்பில் உயிரிழப்பு - இலங்கை மனித உரிமைகள் ஆ...
|
|