இலங்கையின் வளர்ச்சிக்கான நீண்டகால தீர்வுகளில் குறைபாடுகள் உள்ளன – கானா நாட்டின் முக்கிய செய்தித்மான நியூஸ் கானா தெரிவிப்பு!
Tuesday, May 2nd, 2023
இலங்கையின் நாடாளுமன்றம் எதிர்பார்க்கப்படும் பிணை எடுப்பு பற்றி விவாதித்துள்ள போதிலும், நாட்டின் வளர்ச்சிக்கான நீண்டகால தீர்வுகளில் குறைபாடுகள் உள்ளதாக கானா நாட்டின் முக்கிய செய்தித்தளம் ஒன்று விமர்சித்துள்ளது.
நியூஸ் கானா என்ற செய்திச் சேவையே இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளது.
இலங்கை 16 தடவைகள் சர்வதேச நாணய நிதியத்துடன் ஒப்பந்தங்களை செய்துக்கொண்டதாக ஜனாதிபதி கூறுகிறார்.
எனினும் அவர் எதிர்காலத்திற்கான பொருளாதார கணிப்புகளில் ஒரு நேர்மறையான சுழற்சியை முன்வைக்க முயற்சிக்கிறார் என்று நியூஸ் கானா குறிப்பிட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து, வளர்ந்து வரும் நாடுகள் தொடர்பாக சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியால் விதிக்கப்படும் தொடர்ச்சியான கடுமையான நிபந்தனைகளை புறக்கணிக்கிறது.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கியின் சமூக அழிவு தாக்கத்திற்கு ஐந்து தசாப்தங்களுக்கும் மேலான உதாரணங்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
இரண்டு நிறுவனங்களும் இரண்டாம் உலகப் போரின் முடிவில் எழுந்த பிரெட்டன் வூட்ஸ் பணவியல் அமைப்பின் துணை தயாரிப்புக்களாகும்.
1930கள் மற்றும் 1940களின் பாசிச எதிர்ப்புப் போர்களுக்குப் பிறகு ஐரோப்பாவின் பொருளாதார மற்றும் தொழில்துறை புனரமைப்புக்காக இந்த இரண்டு நிறுவனங்களும் வடிவமைக்கப்பட்டுள்ளன.
எவ்வாறாயினும், 1960களின் நடுப்பகுதியில், இந்த இரண்டு நிறுவனங்களின் ஏகாதிபத்தியத்தால் காலனித்துவத்திற்குப் பிந்தைய காலத்தில் உண்மையான சுதந்திர அரசாங்கங்களின் தோற்றங்கள் ஒடுக்கப்பட்டதாக கானா நாட்டின் செய்தித்தளமான நியூஸ் கானா குறிப்பிட்டுள்ளது.
எந்தவொரு புதிய தாராளவாத பொருளாதார மறுசீரமைப்புத் திட்டமும், அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுடன் இணைந்து இலங்கையில் அதிகரித்துவரும் வறுமை மற்றும் வளர்ச்சியின்மை போன்ற பிரச்சினைகளை திறம்பட நிவர்த்தி செய்ய முடியாது.
அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் பொதியை ஏற்றுக்கொள்வதற்கு இலங்கை நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டாலும், இந்த அணுகுமுறை ஸ்திரத்தன்மையை நோக்கி ஒரு நிலையான பாதையை வழங்க முடியாது.
இந்தநிலையில், இடதுசாரிக் கட்சிகள், கூட்டணிகள் மற்றும் தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் இளைஞர்களின் அரசியல் கல்வி, அணிதிரட்டலுக்கு மகத்தான பங்களிப்பைத் தொடர்ந்து செய்ய முடியும்.
அதேநேரம் சமூகத் திட்டங்களுக்கு நிதியுதவி மற்றும் மக்களின் பொருளாதார வலுவூட்டலுக்கான மாற்று முன்மொழிவுகளை தவிர்க்க முடியாமல் அரசியல் மற்றும் வெகுஜனப் போராட்டங்களை ஏற்படுத்தும் என்றும் நியூஸ் கானா தெரிவித்துள்ளழட குறிப்பிடத்தக்கது
000
Related posts:
|
|
|


