இலங்கையின் முன்னேற்றத்திற்கு டிஜிட்டல் தொழிநுட்பத்தை பயன்படுத்த வேண்டும் – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்து!

Tuesday, July 4th, 2023

இலங்கையை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு டிஜிட்டல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாக அதிபர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

சர்வதேச டிஜிட்டல் வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அதிபர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் டிஜிட்டல் வர்த்தகத்தில் இலங்கையை முன்னணியில் கொண்டு செல்ல முடியும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த காலங்களில் இலங்கை எதிர்கொண்ட சவால்கள் இலங்கையர்கள் எந்தவொரு சவாலையும் எதிர்கொள்ளும் திறன் கொண்டவர்கள் என்பதை வெளிப்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: