இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை மேம்படுத்த சர்வதேச நாணய நிதியம் உதவும்!
Tuesday, April 12th, 2016இலங்கை சர்வதேச நாயண நிதியத்திடம் எதிர்ப்பார்த்த பொருளாதார மீட்பு உதவி, இந்த மாதத்துக்குள் கிடைக்க வாய்ப்பிருப்பதாக சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது
சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் கடந்த 31ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தனர். இதன்போது அவர்கள் இலங்கையின் நிதித்துறை அதிகாரிகளுடன் பேச்சுக்களை நடத்தியிருந்தனர்.
இதன்படி அரசாங்கத்தின் பொருளாதாரத்துக்கு 36 மாதக்கால விரிவாக்கப்பட்ட நிதி வசதியை சர்வதேச நாணய நிதியம் வழங்கவுள்ளது.இலங்கையை பொறுத்தவரை பொருளதார மீட்புக்காக 1.5 பில்லியன் டொலர்கள் முதல் 2 பில்லியன் டொலர்கள் வரையான உதவியை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து எதிர்ப்பார்த்துள்ளது.
Related posts:
வேலையற்ற பட்டதாரிகள் கவனத்திற்கு!
முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை காலமானார்!
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் ஆரம்பம்!
|
|