இலங்கையின் நகரொன்றுடன் இணையவுள்ள கொரிய தலைநகர் சியோல்!
Wednesday, November 8th, 2017தென்கொரிய தலைநகரான சியோல் நகரத்தின் மேயர் பார்க் வொன்சூன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.சர்வதேச மன்றங்களில் தென்கொரியாவுக்கு இலங்கை வழங்கிவரும் ஒத்துழைப்புகளுக்கு ஜனாதிபதிக்கு அவர் நன்றி தெரிவித்ததுடன், இலங்கையின் சகோதர நகரமொன்றுடன் இணைப்பை ஏற்படுத்த சியோல் விரும்புவதாகவும் தெரிவித்தார்.
நகரங்களுக்கிடையிலான இத்தகைய இணைப்பு நகர அபிவிருத்தி மூலோபாயங்களை கற்றுக்கொள்ள இருதரப்புக்கும் உதவும் என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
Related posts:
ஆதாரங்களை சமர்ப்பிக் வந்தேன், விசாரணையே நடைபெறவில்லை: வடமாகாண சபை உறுப்பினர் லிங்கநாதன் குற்றச்சாட்ட...
இலங்கையில் கொரோனா தொற்றினால் 30ஆவது மரணம் பதிவானது!
சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தன - இந்திய மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா சந்திப்பு - இந்தியாவின் வளர்...
|
|