இலங்கையின் அபிவிருத்திக்கு மீண்டும் சீனா உதவி!

Saturday, August 4th, 2018

இலங்கைக்கு மேலும் ஒரு பில்லியன் டொலர் கடன் உதவியை சீனா அளித்துள்ளது என இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசாமி தெரிவித்துள்ளார்.

சீனாவினால் வழங்கப்பட்டுள்ள இந்த கடனுக்கு சீன வங்கி சுமார் 5.25 சதவிகிதம் வட்டி விதித்துள்ளதாகவும், கடனை திருப்பி செலுத்த 8 ஆண்டுகள் கால அவகாசம் அளித்துள்ளதாகவும் குறிப்பிட்டார். அதிலும், 3 ஆண்டுகள் சலுகை காலமாக சீனா அளித்துள்ளது.

நாட்டின் பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட உள்ளது எனவும் மத்திய வங்கியின் ஆளுநர் குறிப்பிட்டார்.

Related posts: