வெலிக்கடையிலிருந்து பூசாவுக்கு 150 கைதிகள் மாற்றம்!
Tuesday, June 25th, 2019வெலிக்கடை சிறைச்சாலையிலுள்ள 150 கைதிகள் பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
குறித்த சிறைச்சாலையில், மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ள பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தப்பணிகள் காரணமாகவே, இவ்வாறு கைதிகள் வேறு சிறைச்சாலைகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் தெரிவித்துள்ளார்.
அவர்களில் மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள 69 கைதிகளும் அடங்குவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், பூசா மற்றும் அங்குணுகொலபெலஸ்ஸ சிறைச்சாலைகளின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் பணிப்பாளர் நாயகம் J.W. தென்னகோன் கூறியுள்ளார்.
Related posts:
ஊடகவியலாளர் மீதான தாக்குதல்: தனியான விசாரணை நடைபெறும் என பாதுகாப்புச் செயலாளர் அறிவிப்பு!
இடியுடன் கூடிய மழை பெய்யும் – வானிலை அவதான நிலையம்!
தமிழரசு கட்சி உறுப்பினர் அடாவடி - வெல்லாவெளியில் இரண்டரை வயது குழந்தை வைத்தியசாலையில்!
|
|
தொற்றாளர்கள் இனங்காணப்பட்டால் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்ட பகுதிகள் மீண்டும் முடக்கப்பட...
திரவ பால் உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கை - 4,200 கறவை மாடுகளை இறக்குமதி செய்யவும் அமைச்சரவை அனுமதி!
பல்வேறு மோசடி சம்பவங்கள் - மாதாந்தம் 100 பேருந்து நடத்துனர்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்படுவதாக இலங...