இலங்கைத் தேயிலைக்கான கேள்வி அதிகரிப்பு!

Tuesday, February 12th, 2019

இலங்கைத் தேயிலைக்கான கேள்வி கடந்த வாரம் ஏலச் சந்தையில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி கடந்த வாரம் மொத்தமாக 7.2 மில்லியன் Kg தேயிலை விற்பனையாகியுள்ளது.

அதிக தரம் மற்றும் அதிக தரத்திற்கு அடுத்த தரம் ஆகிய வகைகளுக்கான விலைகளும் அதிகரித்திருந்த நிலையில் அதற்கான கேள்விகளும் அதிகரித்துள்ளன.

சிறந்த மேற்கத்தேய பி.ஒ.பி (BOP) தேயிலைக்கான விலை 1Kg -20 ரூபாவால் அதிகரித்திருந்தது.

பி.ஓ.பி.எஃப் (BOPF) தேயிலையின் விலை 1Kg- 20 -30 ரூபா வரையில் அதிகரித்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts:


குழந்தைகளுக்கான தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மீளவும் ஆரம்பம் - அரச குடும்பநல சேவை உத்தியோகத்தர்கள் ச...
விலை திருத்தத்தின் போது 12.5 கிலோகிராம் சிலிண்டரின் விலை 200 ரூபாவிற்கு மேல் அதிகரிக்கக வாய்ப்பு - ல...
போக்குவரத்து சட்டத்தில் திருத்தம் - தேவையான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்...