மிளகுக்கு நிலையான விலை!

Friday, July 14th, 2017

எதிர்வரும் இரண்டு வாரங்களுள் மிளகை கொள்வனவு செய்வதற்கான நிலையான விலையை அமுல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக முதன்மை தொழில் அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்தே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.எதிர்காலத்தில் அமைச்சரவை அனுமதியை பெற்று, அது தொடாபான நிதி ஒதுக்கீட்டை நிதியமைச்சின் ஊடாக ஒதுக்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் இதன்போது மேலும்கு றிப்பிட்டுள்ளார்.மிளகின் விலை சரிவடைந்துள்ளதாக கூறி இரத்தினபுரி கொலொன்ன பிரதேச மிளகு விவசாயிகள் ஆயிரக்கணக்காணோர் நேற்று எம்பிலிபிட்டிய – இரத்தினபுரி பிரதான பாதையை மறைத்து கொடகாவலயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தரப்பினர் மீது இனந்தெரியாத சிலர் தாக்குதலை மேற்கொண்ட நிலையில் அங்கு தீவிரநிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Related posts: