இலங்கைக்கு 4 அதி நவீன பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்கைளை வழங்கியது அவுஸ்ரேலியா!
Sunday, October 18th, 2020
அவுஸ்ரேலிய பாதுகாப்புத்துறை மற்றும் அவுஸ்ரேலிய உள்துறை திணைக்களம் இணைந்து 4 பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்களை இலங்கைக்கு வழங்கியுள்ளது.
கொழும்பில் உள்ள அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து இலங்கை கடற்படையினரிடம் குறித்த கருவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி அவுஸ்ரேலிய பாதுகாப்புத் துறையால் 2 பி.சி.ஆர் இயந்திரங்களும் அவுஸ்ரேலிய உள்துறை திணைக்களத்தால் 2 பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரங்களும் கடற்படைக்கு வழங்கப்பட்டன.
அத்துடன் குறித்த பி.சி.ஆர் இயந்திரங்கள் ஒரே நேரத்தில் 4 மாதிரிகள் சோதனை செய்வதற்கான திறன் கொண்டுள்ளது.
அவுஸ்ரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் குரூப் கேப்டன் ஷொன் அன்வின் வழங்கிய பி.சீ.ஆர் பரிசோதனை இயந்திரங்கள், கடற்படை சார்பில் கடற்படை நடவடிக்கைகளின் இயக்குநர் பிரசன்ன மஹவித்தனாவால் பெறப்பட்டமை குறிப்பிடத்தக்ககது.
Related posts:
|
|
|


