இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் – பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன இடையில் சந்திப்பு!.
Wednesday, December 13th, 2023இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் போல் ஸ்டீவன்ஸ் மற்றும் பாதுகாப்பு செயலாளர் நாயகம் கமல் குணரத்ன ஆகியோருக்கு இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத குடியேற்றங்களை தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் இதன்போது பாராட்டியுள்ளார்.
அத்துடன், குறித்த கலந்துரையாடலில் சட்டவிரோத கடல் மார்க்க கடத்தல் மற்றும் சர்வதேச குற்றங்களை ஒடுக்குவது என்பன குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
மகப்பேற்றுச் சிகிச்சைப்பிரிவு மீண்டும் செயற்படத் தொடங்கியது!
மெழுகுவர்த்தியின் ஒளி சக மக்களுக்கும் நிவாரண ஒளியை அனுபவிப்பதற்கு இடமளிக்கட்டும் - பிரதமர் மஹிந்த ...
நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் அடுத்து வரும் சில நாட்களுக்கு அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் - வ...
|
|