இறுதிக் கட்டப் பணிகள் நிறைவடைந்துள்ளது – சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவிப்பு!

Sunday, May 3rd, 2020

கொரோனா தொற்று தொடர்பில் வெலிசறை கடற்படை முகாமில் உள்ள சிப்பாய்களிடம் பீ.சி.ஆர் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு உயிரியல் மாதிரிகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகளின் இறுதி கட்ட பணிகள் நிறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினத்தில் 15 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருந்தது. இதனபடிப்படையில் நாட்டில் கொரோனா தொற்றில் இதுவரை அடையாளம் காணப்பட்டவர்களின் தொகை 705 ஆக அதிகரித்துள்ளது.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட 15 பேரில் 13 பேர் கடற்படையினர் எனவும், மேலும் இரண்டு பேர் அவர்களுடன் தொடர்பினை பேணியவர்கள் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related posts: