இரு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை !
Sunday, March 24th, 2024
ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் ஆகிய இரண்டையும் ஒரே நேரத்தில் நடத்துமாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இவ்வாறு இரண்டையும் ஒன்றாக நடத்துவதால் செலவை மீதப்படுத்த முடியும் என்று சுட்டிக்காட்டியுள்ள சபாநாயகர், இரண்டு தேர்தல்களையும் தனித்தனியே நடத்தினால் அதிக பணம் செலவாகும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நாடு இப்போது இருக்கின்ற நிலையில் இரண்டையும் ஒன்றாக நடத்துவதே சிறந்தது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார் என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
சுப்பர் மூனினால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு!
பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான தேசிய அடையாள அட்டை!
மீண்டும் வாள்வெட்டு நெல்லியடியில் பதற்றம்!
|
|
|


