இராணுவத் தளபதி – கடற்படைத் தளபதி சந்திப்பு!
Tuesday, August 15th, 2017இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க மற்றும் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுணவர்தன ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இராணுவத் தளபதி நேற்று முன்தினம் கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார். இராணுவத் தளபதி தமது கடமைகளைப் பொறுப்பேற்ற பின்னர் கடற்படைத் தலைமையகத்திற்கு விஜயம் செய்துள்ளார்.
இராணுவத் தளபதி மற்றும் கடற்படைத் தளபதி ஆகியோர் இதன்பேது முக்கிய கலந்துரையாடல்களில் ஈடுபட்டுள்ளனர். இருவருக்குமிடையிலான சந்திப்பில் தங்களது சேவைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சந்திப்பை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டுள்ளன.
Related posts:
பரீட்சை எழுதிவிட்டு திரும்பிய மூன்று மாணவர்கள் மீது கத்தி குத்து!
மது போதையில் வாகனம் செலுத்திய பலர் கைது!
அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கு வலுவான கொள்கை தேவை - சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்து!
|
|