இராணுவத் தளபதியை ஆஜராகுமாறு நீதிமன்று உத்தரவு!

Thursday, January 18th, 2018

நாவற்குழியில்  இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் காணாமலாக்கப்பட்ட வழக்கில் அப்போது நாவற்குழிபகுதிக்கு பொறுப்பாகவிருந்த தளபதியை  நீதிமன்றில் ஆஜராகுமாறு யாழ்.மேல் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

நாவற்குழி படைமுகாமில் 1996ம் ஆண்டு இராணுவத் தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டிவெலான தலைமையிலான படையினர் கைது செய்த இருபத்தி நான்கு இளைஞர்கள் பின்னர் காணாமல் போயிருந்தனர். காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய உறவினர்கள்சட்டத்தரணிகளான கு.குருபரன் மற்றும் எஸ்.சுபாசினி ஆகியோர் ஊடாக தமது உறவினர்களை மீட்டுத் தருமாறு யாழ்.மேல்நீதிமன்றில் வழக்கு  தாக்கல் செய்திருந்தனர்

இந்நிலையில் 1ம் எதிரியாக துமிந்த கெப்பிட்டிவெலான 2ம் எதிரியாக இலங்கை இராணுவ தளபதி மற்றும் 3ம் எதிரியாக சட்டமா அதிபர் ஆகியோர் குறிப்பிடப்பட்டிருந்தநிலையில் இந்த வழக்கு  யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

இதன்போது சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் எதிரிகள் சார்பில் இரண்டு வழக்கறிஞர்கள்  முன்னிலையாகியிருந்தனர்.  இதற்குவழக்குத்தொடுனர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு தமது வாதங்களை முன்வைத்ததுடன் குறித்தசம்பவம் இடம்பெற்றபோது நாவற்குழி தளபதியாக இருந்த துமிந்த கெப்பிட்டி வெலான தற்போதும் இராணுவ சேவையில் இருப்பதாக சுட்டிக்காட்டினார்கள். வழக்கை விசாரித்த நீதிபதி மா.இளஞ்செழியன்  முதலாம் எதிரியான துமிந்த கெப்பிட்டிவெலானவை வரும்ஏப்ரல் மாதம் இரண்டாம் திகதி மன்றில் ஆஜராகுமாறு அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகளுக்கு உத்தரவிட்டார்

Related posts:

கிராம மட்ட புதிய தொழிலதிபர்களை உருவாக்க புதிய தொழில்நுட்பம் தாயார் - வறுமை ஒழிப்புக்கான ஜனாதிபதி செய...
ஜூனில் 27 ஆயிரத்து 937 பேர் தொழிலுக்காக வெளிநாடு சென்றுள்ளனர் - இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியக...
சிறிய செயற்திட்டங்கள் ஊடாக பாரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும் – வடக்கு மாகாண ஆளுநர் வலியுறுத்து!