இரண்டு மாதங்களில் 250 பேரின் உயிரை பலியெடுத்த விபத்துக்கள்!

Tuesday, April 11th, 2017

கடந்த இரண்டு மாதங்களில் ஏற்பட்ட வாகன விபத்துக்களில் 250 பேர் உயிரிழந்துள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது.

அதிக வேகம், குடிபோதை மற்றும் நித்திரையின்மையே பல விபத்துக்கள் ஏற்பட காரணம் என சபையின் தலைவர் சிசிர ஜயகொடி தெரிவித்துள்ளார்.

வாகனங்களின் தடுப்பு கட்டமைப்புகள் (பிரேக்) ஒழுங்கான முறையில் செயற்படாமையே பல விபத்துக்கள் ஏற்பட காரணமாக அமைந்துள்ளது.

எப்படியிருப்பினும் விபத்துக்கள் தொடர்பில் மோட்டார் வாகன போக்குவரத்து திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளதாக பேராசிரியர் சிசிர கோதகொட மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: