இரண்டு மாதங்களில் 16 இன ரீதியான வன்முறை சம்பவங்கள் – காவல்துறை ஊடக பேச்சாளர்!
Monday, June 12th, 2017கடந்த இரண்டு மாதங்களில் 16 இன ரீதியான வன்முறை சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
ஊடக சந்திப்பில் காவல்துறை ஊடக பேச்சாளர் பிரியந்த ஜெயகொடி இதனை குறிப்பிட்டார் இந்த சம்பவங்கள் தொடர்பில் இதுவரை நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்
இவர்களில் ஒருவர் பொதுபல சேனா அமைப்பை சேர்ந்தவர் எனவும், அவர் நான்கு தாக்குதல் சம்வங்களுடன் தொடர்பு கொண்டிருப்பதாக காவல்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார் அத்துடன் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் மூன்று வெவ்வேறு தாக்குதல் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவர்களில் ஒருவர் புத்தரை சமூக வலைத்தளங்களில் நிந்தனை செய்த ஒருவரும் மற்றைய இருவரும் சொத்துக்களை சேதப்படுத்திய குற்றச்சாட்டையுடைவர்கள் எனவும் காவற்துறை ஊடக பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்
Related posts:
மாகாண சபையினருக்கு புதிய பல நடைமுறைகள் - அரசதலைவர் செயலகம் சுற்றறிக்கை!
பொலித்தீன் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றும் பணி ஆரம்பம்!
மக்களின் உண்மையான பிரச்சினைகளை மறைக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன் - அதிகாரிகளுக்கு ஜனாதிபதி அறிவுறு...
|
|
கொரோனா அச்சுறுத்தல்: யாழ்ப்பாணத்தில் 2 ஆவது கட்டமும் வெற்றிகரமாக எதிர்கொள்ளப்படும் - யாழ்.போதனா வைத...
சந்திரகுமாரின் வெளியேற்றத்தின் பின்னரே வன்னியில் எமது கட்சி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது – ஈ....
இந்தியாவுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதற்கான தளமாக இலங்கையை பயன்படுத்த எவரும் அனுமதி கிடையாது - வெளிவிவக...