இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்தார். ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா!
Saturday, May 4th, 2024இரண்டு நாள்கள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் யோகோ கமிகாவா இலங்கை வந்தடைந்துள்ளார்.
இந்த விஜயத்தின்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோரை சந்தித்து ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் கலந்துரையாட உள்ளார்.
அத்துடன், ஜப்பானிய வெளிவிவகார அமைச்சர் மற்றும் அவரது தூதுக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரியுடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தவுள்ளனர்.
இதன்போது, அவர் கொழும்பு துறைமுகத்துக்கான கண்காணிப்பு விஜயமொன்றையும் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரது இந்த விஜயத்தின் போது இருதரப்பு கடன் மறுசீரமைப்பு தொடர்பான இறுதி ஒப்பந்தம் குறித்தும் கலந்துரையாடப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறமை குறிப்பிடத்தக்கது
Related posts:
புங்குடுதீவு மாணவி வித்தியா வழக்கை ஏழு நாட்களுக்குள் முடிவுறுத்த வேண்டும்: யாழ். மேல் நீதிமன்றத்தில்...
பொலிஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கு புதிய செயன்முறை – ஜனாதிபதி!
கடந்தகால ஆட்சியாளர்கள் செய்யத் தவறியதை ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச தலைமையிலான அரசு செய்துகொடுக்கிறது - ...
|
|