இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழுக்கவைக்கப்படும் பழங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க குழு நியமனம்!
Saturday, February 19th, 2022
இரசாயனப் பொருட்களைப் பயன்படுத்தி பழங்களைப் பழுக்க வைப்பதால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்க நுகர்வோர் விவகார இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண குழுவொன்றை நியமித்துள்ளார்.
இரசாயனத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல்நல பாதிப்புகள் குறித்து எந்த ஆய்வு அறிக்கையும் சமர்ப்பிக்கப்படவில்லை.
இந்த இரசாயனத்தை பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிப்பது குழுவின் பொறுப்பு என்றும் நுகர்வோர் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குழுவின் அறிக்கை சுகாதார குழு மற்றும் அமைச்சகத்தின் உணவு ஆலோசனைக் குழுவிடம் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
கறுப்புக்கண்ணாடி பொருத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!
வரிச் சலுகையை இழந்ததால் கடந்த காலத்தில் 37 ஆயிரம் கோடி இழப்பு!
முச்சக்கரவண்டி தொடர்பில் ஜனாதிபதியின் அறிவிப்பு!
|
|
|


