இயற்கை விவசாயம் தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய முறையில் விழிப்புணர்வுகள் கிடைக்கப்பெறவில்லை – அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவிப்பு!

Monday, January 24th, 2022

கொரோனா பரவல் காரணமாக அதிகாரிகளால் இயற்கை விவசாயம் தொடர்பில் விவசாயிகளுக்கு உரிய முறையில் விழிப்புணர்வுகளை அறிவிக்க முடியாதிருந்ததாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கூறுகையில் –

இந்தக் குறைபாடுகளால் விவசாயிகள் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர் என்பதை ஏற்றுக்கொள்வதாகவும் அவர் ஒப்புக்கொண்டார்.

மேலும் பயிர் சேதங்களுக்கு விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய இழப்பீடு மற்றும் நெல் விலை குறித்து அடுத்த அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.

இதேநேரம் பசுமை விவசாயத்தில் பல குறைபாடுகள் உள்ளதாகவும், உரிய நேரத்தில் விவசாயிகளுக்கு உரம் வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்

எதிர்வரும் பருவகாலத்தில் இக்குறைபாடுகள் தவிர்க்கப்பட்டு உரிய நேரத்தில் உரங்கள் வழங்கப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது..

000

Related posts: