இன்று நள்ளிரவுமுதல் பேருந்து கட்டணங்கள்2.23 சதவீதத்தால் குறைக்கப்படும் – தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவிப்பு!
Tuesday, July 19th, 2022
இன்று (19) நள்ளிரவுமுதல் அமுலுக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 2.23 சதவீதத்தால் குறைக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 38 ரூபாவாக மாற்றியமைக்கப்படும் என அவர்கள் குறிப்பிடுகின்றனர்.
நேற்றுமுன்தினம் நள்ளிரவுமுதல் அமுலாகும் வகையில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டன.
இந்த நிலையில், எரிபொருள் விலை குறைப்புக்கு ஏற்றவகையில் பேருந்து கட்டணங்களை குறைக்குமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன அறிவுறுத்தல் வழங்கியிருந்தார். இந்நிலையில், புதிய பேருந்து கட்டணங்கள் இன்றையதினம் வெளியிடப்படவுள்ளழட குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
இடமாற்றப்படும் பொலிஸ் பொறுப்பதிகாரிகள்!
ஏப்ரல் 21 தாக்குதல் : ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் நிறைவு – ஜனவரி 31 இல் ஜனாதிபதியிடம் கையளிப்பு!
இலங்கையின் ஏற்றுமதிகளை சடுதியாக குறைத்த சீனா!
|
|
|


