இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகின்றது தேர்தல் பிரச்சாரங்கள் !

Wednesday, February 7th, 2018

நடைபெறவுள்ள உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரச்சார பணிகள் யாவும் இன்று நள்ளிரவு 12 மணியுடன் நிறைவுக்கு வரவுள்ளன.

இந்த நிலையில் பிரதான அரசியல் கட்சிகளின் இறுதிக் கட்ட பிரச்சார பணிகள் தீவிரமடைந்துள்ளன தேர்தலுக்கு இன்னம் ஒரு சில தினங்களே எஞ்சியுள்ள நிலையில் பிரதான கட்சிகள் கடும் பிரச்சாரச் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளன

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள நிலையில் தேர்தல் விதிமுறைப்படி இன்று 07ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் தேர்தல் பிரச்சாரப் பணிகள் அனைத்தும் முடிவுக்கு வரவேண்டும் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலானது கலப்பு முறையில் நடைபெறவுள்ளது. அதாவது தொகுதி மூலம் 60 வீதமான உறுப்பினர்களும்  விகிதாசாரம மூலம் 40 வீதமான உறுப்பினர்களும் உள்@ராட்சி மன்றத் தேர்தலில் தெரிவு செய்யப்படுவார்கள்

மேலும் விருப்பு வாக்கு முறைமை இத் தேர்தல் முறையில் இல்லை என்பதுடன் பெண்களுக்கான இட ஒதுக்கீடு 25 வீதமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

தேர்தலில் 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்கள் சார்பாக களமிறங்கியுள்ளார் தற்போதைய நிலமையில் நாட்டில் 341 உள்@ராட்சி மன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன அந்த 341 உள்ளூராட்சி மன்றங்களுக்கு எண்ணாயிரத்து முன்னூற்று ஐம்பத்தாறு உறுப்பினாகள் தெரிவு செய்யப்படவுள்ளனர்

மொத்தமாக இருநூற்று எழுபத்தாறு பிரதேச சபைகளும் 24 மாநகர சபைகளுமாக நாற்பத்தொரு நகரசபைகளுமாக பிரிக்கப்பட்டுள்ளன அந்த வகையில் புதிய தேர்தல் முறைப்படி இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது.

எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை நாடளாவிய ரீதியில் உள்ளூராட்சி மன்றத்தேர்தல் வாக்களிப்பு இடம்பெறும் இறுதியாக விகிதாசார முறையில் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது நாட்டில் 355 மன்றங்கள் இருந்தன அம் மன்றங்களுக்கு நான்காயிரத்து நானூற்று என்பத்தாறு உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர்

Related posts: