இன்றும் 9 வருடங்களில் குடிநீர்  தட்டுப்பாடு ஏற்படும் – ஐ.நா.

Wednesday, March 23rd, 2016

மனித செயற்பாடுகள் காரணமாக நீர் நிலைகள் அழிவடைந்து 9 வருடங்களில் குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படவுள்ளது என்பதை நீங்கள் அறிவீர்களா?

எதிர்காலத்தில் ஏற்படவுள்ள நீர் பற்றாக்குறையை எதிர்நோக்குவதற்குத் தயாராகுமாறு நேற்றைய சர்வதேச நீர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் உலக வாழ் மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளது.

உலக வாழ் மக்களின் இரண்டு பில்லியன் பேர் 2025 ஆம் ஆண்டாகும் போது குடிநீரைப் பெற்றுக் கொள்வதில் சவாலை எதிர்நோக்கவுள்ளனர்.

இதனால் நீர் மற்றும் நீர் நிலைகளைப் பாதுகாப்பது தொடர்பில் கவனம் செலுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபை கோரியுள்ளது.

Related posts: