இன்னும் மூன்று மாதங்களுக்கு தேங்காயின் விலை குறையாது – தெங்கு அபிவிருத்தி அதிகார சபை!
Sunday, February 12th, 2017தற்போது சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை குறைவடைவதற்கு இன்னும் மூன்று மாத காலம் எடுக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
தற்போது சந்தையில் தேங்காய் ஒன்றின் விலை 60 முதல் 70 மற்றும் 80 ரூபா அளவில் விற்பனை செய்யப்படுகின்றது.
இந்த போகத்தில் தெங்கு உற்பத்தியில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாகவே, தேங்காய் விலை அதிகரித்துள்ளதாக தெங்கு உற்பத்தி சபையின், தலைவர் கபில யகன்தாவலகே தெரிவித்துள்ளார். வீட்டு நுகர்வுக்காக பயன்படுத்தப்படும் தேங்காயில், நூற்றுக்கு 40 சதவீத தேங்காய் கழிவுப்பொருளாக வீசப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
கண்ணீர் கடலில் தத்தளிக்கிறது தமிழகம்!
இறக்குமதி செய்யப்பட்டுள்ள கழிவு - முதலீட்டு சபையின் உத்தரவு!
யாழ். மாநகர சபை எல்லைக்குள் அனுமதியற்ற குடிநீர் விற்பனை - சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானம்!
|
|