இன்றும் மழைபெய்யும் வாய்ப்பு – வளிமண்டலவியல் திணக்களம் எதிர்வுகூறல்!

Saturday, November 27th, 2021

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இன்றும் இடியுடன் கூடிய மழைவீழ்ச்சிக்கான சாதகமான நிலமை காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேவேளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காலைமுதல் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.

எனவே மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: