இன்றும் பல பாகங்களில் மழை – வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்!
Sunday, February 20th, 2022
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
விமானிகளை சோதனைக்கு உட்படுத்த இணக்கம்!
அரியாலை மணியம் தோட்டம் பகுதியில் ஈழ மக்கள் ஜனாநயகக் கட்சியின் கட்சிக் காரியாலயம் திறந்துவைப்பு!
5 மாதங்களுக்குள் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியும் - மத்திய வங்கி ஆளுநர் நம்பிக்கை!
|
|
|


