இன்றுமுதல் தாபல் மூலம் வாக்களிப்பு விண்ணப்பங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு!

Friday, March 6th, 2020

எதிர்வரும் பொதுதேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று(06) முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

விண்ணப்பங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் பொறுப்பேற்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதி எந்த வகையிலும் நீடிக்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொது தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 12ம் திகதி முதல் 19 திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: