மேலும் கால அவகாசம் வழங்க ஐ.நா முடிவு!

Tuesday, June 28th, 2016

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 32 ஆவது கூட்டத் தொடரில் எதிர்வரும் புதன்கிழமை இலங்கை தொடர்பான வாய்மூல அறிக்கை வெளியிடப்படவுள்ள நிலையில் இதனூடாக இலங்கைக்கு மேலும் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் கடந்த செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட பிரேரணையை முழுமையாக அமுல்படுத்துவதற்கே இந்த கால அவகாசம் வழங்கப்பட வுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணைக்கு அமைவாக அரசாங்கமானது உள்ளக விசாரணை பொறிமுறையை முன்னெடுப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது..

எனவே அந்த வேலைத்திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பிலும் வெளிவிவவாகர அமைச்சர் மங்கள சமரவீர ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. அதுமட்டுமன்றி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள காணாமல்போனோர் குறித்து ஆராயும் நிரந்தர அலுவலகம் தொடர்பிலான சட்டமூலம் தொடர்பிலும் இலங்கை அரசாங்கம் ஜெனிவாவில் விளக்கமளிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts:

நாங்கள் மந்தைக் கூட்டங்களா?: வடமாகாண வேலையற்ற பட்டதாரிகள் வடக்கின்  முதலமைச்சரிடம் கேள்வி!
அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் கருத்திட்டத்தில் வேலணை பிரதேச நன்நீர் நிலைகளில் மேலும் ஒருதொகுதி மீன் ...
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது – தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் எச்சரிக்கை!