இன்றுமுதல் தாபல் மூலம் வாக்களிப்பு விண்ணப்பங்கள் – தேர்தல்கள் ஆணைக்குழு!
Friday, March 6th, 2020
எதிர்வரும் பொதுதேர்தலுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் இன்று(06) முதல் ஏற்றுக்கொள்ளப்படுமென தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
விண்ணப்பங்கள் எதிர்வரும் 16 ஆம் திகதி வரையில் பொறுப்பேற்கப்படும் என்றும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதி எந்த வகையிலும் நீடிக்கப்படமாட்டாது என்று தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் பொது தேர்தலுக்கான வேட்புமனுக்கள் எதிர்வரும் 12ம் திகதி முதல் 19 திகதி வரை ஏற்றுக்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
இரு மாதங்களில் நடைமுறைக்கு வருகின்றது இலத்திரனியல் அடையாள அட்டை?
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தி டெங்கு பரிசோதனைக்கு அனுமதியுங்கள் - யாழ். பிராந்திய சுகாதார பணிமனை!
2022 நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்த க.பொ.தர சாதாரண பரீட்சை 2023 பெப்ரவரியில் நடத்த தீர்மானம் ...
|
|
|


