இந்தோனேஷியா சென்ற ஜனாதிபதிக்கு சிறப்பு வரவேற்பு..!
Monday, March 6th, 2017
இந்து சமுத்திர பிராந்தியத்தின் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் கலந்துகொள்வதற்காக இந்தோனேசியாவிற்கு விஜயம் மேற்கொண்டு ஜகர்த்தாவில் உள்ள Soekarno Hatta சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்த ஜனாதிபதி மைத்திரிபாலவுக்க சிறப்பான வரவேற்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தோனேசியா அரசின் சார்பாக அந்நாட்டின் மக்கள் விவகாரம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் Basuki Hadimuljono மற்றும் விசேட தூதுக்குழுவினர் ஜனாதிபதிக்கு மாலை அணிவித்து கோலாகலமாக வரவேற்றனர்.
அத்துடன் ஐ.நா கூட்ட தொடர்களை முடித்துக்கொண்டு இந்தோனேஷியா சென்றுள்ள அமைச்சர் மங்கள சமரவீர, இராஜாங்க அமைச்சர் வீ.எஸ்.இராதாகிருஷ்ணன், பிரதி அமைச்சர்களான சுஜீவ சேனசிங்க, திலீப் வெதஆரச்சி உள்ளிட்டோர் பங்கு பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts:
சாதாரண தரம் கூட சித்தியடையாதொருக்கு விளையாட்டு ஆலோசகர் பதவி ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!
மணல் தொடர்பில் ஒரே நாளில் சுமார் 200 முறைப்பாடுகள் - சுரங்க பணியகம் வெளியிட்டுள்ள தகவல்!
சவால்களுக்கு மத்தியிலும் மக்களுக்கான சேவை தொடரும் – அமைச்சர் பீரிஸ் உறுதிபடத் தெரிவிப்பு!
|
|
|


