இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயம்!
Sunday, September 29th, 2024
இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசநாயக்கவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்வதற்காக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இலங்கைக்கு ஒரு நாள் விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரியவருகின்றது.
எதிர்வரும் நான்காம் திகதி அவர் இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
முன்னதாக அனுரகுமார திசநாயக்க புதுடில்லிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தவேளை ஜெய்சங்கர் அவரை சந்தித்திருந்தார்.
இந்திய வெளிவிவகார அமைச்சரின் விஜயத்தின்போது இந்தியாவின் உதவியுடன் முன்னெடுக்கப்படும் பல திட்டங்கள் குறித்து ஆராயப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
Related posts:
மத்தியஸ்தம் செய்ய தயார்!- பான் கீ மூன்!
பொருளாதார மத்திய நிலையங்களுக்கு செல்வதற்கு அனுமதி - பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு!
காலாவதி திகதி குறிப்பிடாமல் வழங்கப்பட்ட அனைத்து கனரக போக்குவரத்து சாரதி உரிமங்களும் இரத்து செய்யப்பட...
|
|
|


