வாக்காளர் பெயர் பட்டியலை எதிர்வரும் 24 ஆம் திகதி உறுதிப்படுத்த நடவடிக்கை!

Sunday, January 5th, 2020



2019 ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலை எதிர்வரும் 24 ஆம் திகதி உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய எதிர்வரும் பொதுத்தேர்தலுக்காக 2019 வாக்காளர் பெயர் பட்டியல் பயன்படுத்தப்படும் என தெரியவருகின்றது.

மார்ச் மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி முதல் மே மாதம் 6 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் தேர்தல் நடத்தப்படும் என செய்திகள் கூறுகின்றன.

எவ்வாறாயினும், அதற்கு முன்னதாக பொதுத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமாயின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலுக்கு செல்ல முடியும்.

19வது அரசியலமைப்பு சீரத்திருத்திற்கமைய நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் நான்கரை வருடத்திற்கு பிறகே ஜனாதிபதிக்கு கிடைக்க பெறும்.

இதன்படி நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு மார்ச் மாதம் முதலாம் திகதியே கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts: