இந்திய – இலங்கை இடையிலான வர்த்தகத் தொழில்துறை அபிவிருத்தி அங்குரார்பணம்!
Monday, November 7th, 2016
இந்திய – இலங்கை வர்த்தகத் தொழில்துறை அபிவிருத்தி அங்குரார்பண நிகழ்வு கொழும்பு ஹில்டன் ஹோட்டலில் நேற்று இடம்பெற்றது.
இந்திய மத்திய அரசின் முன்னாள் அமைச்சரும் இந்து – ஸ்ரீலங்கா சேம்பர் அமைப்பின் இணைத்தலைவருமான கே.கிருஷ்ண-குமார் தலைமையில் இந்த நிகழ்வுகள் இடம்பெற்றன.
இந்த நிகழ்வில் இந்தியாவில் இருந்து பெரும் முதலீட்டாளர்கள், தொழில் அதிபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாணத்தில் சகல துறையையும் மேம்படுத்தல் வேலையற்ற இளைஞர் யுவதிகளுக்கு வேலைவாய்ப்புக்களை வழங்குதல் உள்ளிட்ட நோக்காக கொண்டு இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, குறித்த நிகழ்வில் இந்திய உயர் ஸ்தானிகர் வை.சின்ஹா மற்றும் அமைச்சர்களான சரத் அமுனுகம, ரவூப் ஹக்கீம் மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நசீர் அஹமட் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Related posts:
எட்டு மாவட்டங்களிலுள்ள பாடசாலைகளுக்கும் நான்கு நாட்களுக்கு விடுமுறை!
செப்டம்பர் வரை கட்டுப்பாடுகள் தொடரும் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபகச தெரிவிப்பு!
எரிபொருள் மற்றும் மின்சார பிரச்சினைகளுக்கு தீர்வு காண அமைச்சர் ஒருவர் அவசியம் - பொதுப் பயன்பாடுகள் ...
|
|