இந்தியா, சீனாவுடனான இலங்கையின் கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை வெற்றி – ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் தெரிவிப்பு!
Tuesday, January 17th, 2023
கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களை நோக்கும்போது, எமது பொருளாதாரத்தை சரியான பாதையில் தடமேற்றுவதற்காக நாம் முன்னெடுத்த செயற்பாடுகளை அவதானிக்க முடியும்.
மேலும், இந்தியா மற்றும் சீனாவின் கடன் மறுசீரமைப்பு ஒப்புதலை பெற வேண்டிய பணிகள் மாத்திரமே மீதமுள்ளன.
அந்த இரு நாடுகளுடனும் தற்போதுவரை முன்னெடுக்கப்பட்ட பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதென கூறமுடியும்.
விரைவில் அது தொடர்பான பதில்கள் கிடைக்கப்பெறும் என்று ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நம்பிக்கை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Related posts:
எல்லை நிர்ணயவிவாதத்திற்கு பின்னர் தேர்தல் குறித்து தீர்மானம்!
அவுஸ்ரேலியாவிற்கு சட்டவிரோதமாக குடியேற முயற்சித்த 41 இலங்கையர்கள் நாடு திரும்பினர் - 37 பேருக்கு பி...
உலகளாவிய சவால்களுக்கு முகங்கொடுக்கக்கூடிய நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ற கல்வி முறையொன்று நாட்டில் அற...
|
|
|


