இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம் – செப்டம்பரில் கடமைகளை பொறுப்பேற்பாரெனவும் தகவல்!
Monday, August 14th, 2023
இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பரில் தனது கடமைகளை நிறைவு செய்யும் மிலிந்த மொரகொடவுக்குப் பின் அவர் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பதவியேற்கவுள்ளார்.
இதற்கமைய சேனுகா செனவிரத்ன தற்போது ஜனாதிபதி செயலகத்தில் வெளிநாட்டு ஊடகப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுகிறார்.
முன்னதாக அவர் வெளிவிவகார செயலாளராக பணியாற்றியதுடன், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், ஐக்கிய இராச்சியத்தில் உயர் ஸ்தானிகராகவும் பின்னர் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
செய்தி ஊடக உரிமைகள் மற்றும் தர நிர்ணயம் தொடர்பாக பொது மக்களுடனான கலந்துரையாடல்!
தோழர் அன்பு அவர்களின் தந்தையாருக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அஞ்சலி மரியாதை!
விளையாட்டு அரங்கு, உடற்பயிற்சி மத்திய நிலையங்கள் பதிவு செய்யப்பட வேண்டும் - அமைச்சர் நாமல் ராஜபக்ஷ ...
|
|
|


