இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமனம் – செப்டம்பரில் கடமைகளை பொறுப்பேற்பாரெனவும் தகவல்!
Monday, August 14th, 2023இந்தியாவுக்கான இலங்கையின் புதிய உயர்ஸ்தானிகராக சேனுகா திரேனி செனவிரத்ன நியமிக்கப்படவுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பரில் தனது கடமைகளை நிறைவு செய்யும் மிலிந்த மொரகொடவுக்குப் பின் அவர் இந்தியாவுக்கான உயர்ஸ்தானிகராக பதவியேற்கவுள்ளார்.
இதற்கமைய சேனுகா செனவிரத்ன தற்போது ஜனாதிபதி செயலகத்தில் வெளிநாட்டு ஊடகப் பணிப்பாளர் நாயகமாக பணியாற்றுகிறார்.
முன்னதாக அவர் வெளிவிவகார செயலாளராக பணியாற்றியதுடன், நியூயோர்க்கில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையில் இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதியாகவும், ஐக்கிய இராச்சியத்தில் உயர் ஸ்தானிகராகவும் பின்னர் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதுவராகவும் பணியாற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எத்தனை நம்பிக்கையில்லாத் தீர்மானம் வந்தாலும் போராட்டத்தை கைவிட மாட்டேன் - அமைச்சர் ராஜித !
சர்வதேசம் அங்கீகரிக்கும் வகையிலான பிறப்புச் சான்றிதழ் விரைவில்!
சீனா மற்றும் இந்தியாவைச் சேர்ந்த பிரஜைகள் மலேசியாவுக்குள் பிரவேசிப்பதற்கு இலவச விசா!
|
|