வீரவசனம் பேசி மக்களை உசுப்பேத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கைவந்த கலை – முன்னாள் பிரதியமைச்சர் சோ. கணேசமூர்த்தி!

Wednesday, May 2nd, 2018

வீரவசனம் பேசி மக்களை உசுப்பேத்துவது தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கைவந்த கலை. அந்த அடிப்டையில் தான் எதிர்வரும் மாகாணசபை தேர்தலுக்கு முகம்கொடுப்பதாக முன்கூட்டியே ஒரு புதிய அக்கினிக்குண்டை வீசியுள்ளார். என முன்னாள் பிரதியமைச்சர் சோ. கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்திற்குள் அரசியல் தீர்வு வராவிட்டால் வடக்கு கிழக்கில் நிர்வாக முடக்கல்களை மேற்கொள்வோம். என்றும் அத்துடன் பதவிகளை இராஜினாமா செய்வோம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
இது தமிழ் மக்களை மாற்றும் புதிய அக்கினிக்குண்டாகும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியா மெல்போனில் புலம் பெயர்ந்த தமிழ் மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்வின் பிரதம அதிதியாக கலந்து கொண்டபோதே கணேச மூர்த்தி இதனைத் தெரிவித்துள்ளார்.
கடந்த முப்பது வருடகால யுத்தம் எமது மக்ககை அதள பாதாளத்துக்குள் கொண்டு சென்றது இதற்கு உரம் போட்டவர்கள் இவர்கள் தான். யுத்தம ஓய்ந்து 10 வருட காலம் சென்றுள்ளது.

கடந்த அரசு எம்மை ஏமாற்றிவிட்டது என்று கூறிய இவர்கள் எவ்வித தாக்கமான செயற்பாட்டிலும் ஈடுபடவில்லை. கடந்த அரசாங்கத்தில் ஏற்பட்ட வெறுப்பு காரணமாக தமிழ் முஸ்ஸிம் மக்கள் சுயமாக முன்;வந்து புதிய தேசிய நல்லிணக்க அரசாங்கத்தை கொண்டு வந்தார்கள். இதற்கு நாங்கள் தான காரணம் என்று உரிமை கோருகின்றார்கள்.
அண்மையில் நடைnபெற்ற உள்ளுராட்சி சபை தேர்தலில் பாரிய பின்னடைவை தமிழ் தேசிய கூட்;டமைப்பு எதிர் நோக்கியது.

எனது பட்டிருப்பு தொகுதியில் கடந்த தேர்தலை விட அதிகமான வாக்குகளை மக்கள் ஜக்கிய தேசிய கட்சிக்கு வழங்கினர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரைக் கொண்டுள்ள கல்குடா தொகுதியில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் ஆட்சியமைத்துள்ளார்கள்.

இவ்வாறுதான வடக்கில் பாரிய பின்னடைவை தமிழ் தேசிய கூட்;டமைப்பு சந்தித்;துள்ளது.
வழமை போல தமிழ் மக்களை ஏமாற்றி வாக்கு வங்கியை அதிகரிக்கலாம் என நினைக்கின்றார்கள். புதிய அரசுடன் இணக்கம் வந்தவுடன் எதிர்கட்சிப்பதவியை பெற்றார்கள்.
இனப்பிரச்சனைக்கான தீர்வை 2016க்கு முன் பெறுவோம் எனக் கூறினார்கள். இதன்பின் 2017 ல் கிடைக்குமெனக் கூறினார்கள்.

ஆனால் கிடைத்தபாடில்லை. இந்த சுத்துமாத்தை தமிழ் மக்கள் நன்கு உணர்ந்த படியால் தான் கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலில் நல்ல பாடத்தை மக்கள் புகட்டியுள்ளார்கள். இந்த பின்னடைவை ஈடுசெய்வதற்காக தமிழ் தேசிய கூட்;டமைப்பு புதிய அக்கினிக் குணடை வீசியுள்ளார்கள்.
வடக்கில் நிர்வாக முடக்கல்களை மேற்கொள்வோம். என்றும் அத்துடன் தங்கள் நாடாளுமன்ற பதவிகளை இராஜினாமா செய்வோம் என தமிழ் தேசவிய கூட்டடமைப்பின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.இதனை அவர்கள் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் நீரூபிக்க வேண்டும்.

பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்புக்களுக்காக அரசிடம் சலுகை பெற்றால் எவ்வாறு அரசியல் தீர்வை கோர முடியும் என்றார்கள் ஆனால் எதிர்கட்சி தலைவருக்கு எதிராக நம்பிக்கை யில்லாப் பிரேரணை வரப்போகிறது என்றவுடன் ஜனாதிபதி இல்லத்தில் காட்சியளிக்கின்றார்கள்.

இவர்கள் தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. ஆகவே தான் தேர்தல் வரும் போது அடிக்கடி புதிய குண்டுகளை வீசுவார்கள். இதனை இந்த தடவை செயலில் காட்ட வேண்டும்.
வருகின்ற 8ம் மாதம் அனைத்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தங்கள் பதவிகளை இராஜனாமா செய்ய வேண்டும் என்றார். அதற்கு அவர்கள் தயாராக இருக்கின்றார்களா என்றும் அவர் கேள்வி எழுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: