இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா – நெடுந்தீவுக் கடலில் மண்டைதீவு மற்றும் நாச்சிக்குடாவைச் சேர்ந்த இரு படகோட்டிகளும் கடற்படையினரால் கைது!

இந்தியாவில் இருந்து கடத்தி வரப்பட்ட 458 கிலோ கஞ்சா நெடுந்தீவுக் கடலில் இன்று காலை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
நெடுந்தீவுக் கடலில் சந்தேகத்திற்கிடமாக பயணித்த படகை வழிமறித்த கடற்படையினர் அதில் எடுத்துச் சென்ற 458 கிலோ கஞ்சாவினையும் கைப்பற்றினர்.
இதன்போது கஞ்சாவை எடுத்து வந்த இரு படகோட்டிகளையும் கைது செய்துள்ளனர்.
இதன்போது கைது செய்யப்பட்ட இருவரில் ஒருவர் மண்டைதீவைச் சேர்ந்தவர் எனவும் மற்றையவர் நாச்சிக்குடாவைச் சேர்ந்தவர் என்றும் கூறப்படுகின்றது.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட கஞ்சா மற்றும் சந்தேக நபர்களுடன் நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
யாழ்.மாநகரில் கழிவுகளை அகற்ற மாற்று ஏற்பாடு குறித்து ஆராய்வு!
10ஆம் திகதிக்குப் பின்னர் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அதிகாரம் - மஹிந்த தேசபிரிய!
எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பதற்றத்தைத் தூண்டும் செயலில் பாதுகாப்புப் படை ஈடுபடாது - இராணுவத் தளபதி அ...
|
|