இந்தியாவிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிப்பு – சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவிப்பு!
Tuesday, August 22nd, 2023நாட்டிற்கு வருகைத்தரும் சுற்றுலாப் பயணிகளில் இந்தியாவிலிருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த மாதத்தின் முதல் 20 நாட்களில் மாத்திரம் 15 ஆயிரத்து 330 இந்திய சுற்றுலாப்பயணிகள் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
நாட்டிற்கு வருகைத்தந்துள்ள சுற்றுலாப்பயணிகளின் மொத்த எண்ணிக்கை 89ஆயிரத்து 724 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிரித்தானியாவிலிருந்து, 10 ஆயிரத்து 184 பேரும், சீனாவிலிருந்து 5 ஆயிரத்து 963 பிரஜைகளும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளனர்.
மேலும், ஜேர்மனியில் இருந்து 5 ஆயிரத்து 141 பேரும், ரஷ்யாவில் இருந்து 4 ஆயிரத்து 561 சுற்றுலாப்பயணிகளும் நாட்டிற்கு வருகைத்தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Related posts:
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்வோர் மலேரியா தடுப்பூசியை ஏற்றுங்கள் - வைத்திய கலாநிதி ஜெயக்குமரன்!
கடத்தப்பட்ட கப்பலில் இருந்த 8 பேரும் இலங்கையர்கள் - கடற்படை!
எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலின் கழிவுகளால் கடற்கரை பகுதிகள் பாதிப்பு - மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெ...
|
|