தோழர் தவநாதனின் தாயார் உயிரழந்த செய்தி மனவேதனையை ஏற்படுத்துகின்றது – இரங்கல் செய்தியில் அமைச்சர் டக்ளஸ் தெரிவிப்பு!

Monday, January 10th, 2022

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளரும், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் இணைத் தலைவரின் இணைப்பாளருமான தோழர் தவநாதனின் பாசமிகு தாயார் வைரவநாதன் பார்வதிப்பிள்ளை உயிரழந்த செய்தி மனவேதனையை ஏற்படுத்துகின்றது என கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவு குறித்து விடுத்துள்ள இரங்கல் செய்திக் குறிப்பிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த செய்திக் குறிப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

தமிழ் மக்களுக்கான அபிலாசைகளை நோக்கிய பயணத்தில் நீண்ட காலமாக தன்னை அர்பணித்து செயற்படுகின்ற தோழர் தவநாதன், எமது அமைப்பின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளராக சிறப்பான சேவையை கிளிநொச்சி மக்களுக்கு வழங்கி வருகின்றார்.

தமிழ் மக்கள் சார்பான சிந்தனையாளனாகவும், அர்ப்பணிப்புமிகு செயற்பாட்டாளராகவும் தன்னை நிரூபித்து வருகின்ற தோழர் தவநாதனின் தாயாரின் இழப்பு, தோழர் தவநாதனுக்கும் அவரின் குடும்பத்தினருக்கும் பேரிழப்பாகும்.

குறித்த பேரிழப்பு ஏற்படுத்தியிருக்கும் துயரத்தில் நாமும் இணைத்து கொள்வதுடன் எமது இறுதி அஞ்சலியையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: