இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக இலங்கைக்குள் வருபவர்களால் கொரோனா அபாயம் – தொற்றுநோய் பிரிவு அதிகாரி எச்சரிக்கை!
Wednesday, August 26th, 2020இந்தியாவிலிருந்து படகுகள் மூலம் இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ள தொற்று நோய்பிரிவின் பிரதம அதிகாரி சுடத்சமரவீர இதன் காரணமாக கொரோனா வைரஸ் பரவும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு இந்தியாவிலிருந்து சட்டவிரோத குடியேற்ற வாசிகள் வரும் போக்கு காணப்படுகின்றது இவ்வாறு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை கடற்படையினர் கடும் ரோந்து மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள போதிலும் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு நுழைபவர்களின் எண்ணிக்கையும் ஆபத்தும் அதிகமாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இலங்கைக்குள் நுழைபவர்களில் ஒருவராவது கொரோனா வைரசினால் பாதிக்கப்பட்டிருந்தாலும் அதனால் எங்கள் சமூகத்துக்கு ஆபத்து ஏற்படலாம் எனவும் அவர் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|