இந்தியாவிலிருந்து அரிசி இறக்குமதி !
Thursday, August 31st, 2017
நாட்டில் அரிசியின் விலை அதிகரிப்பதைக் கட்டுப்படுத்தும் நோக்குடன் மேலும் ஒரு மெட்ரிக் தொன் அரிசியை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்தது
70 ஆயிரம் மெட்ரிக் தொன் நாட்டரிசியும், 30 ஆயிரம் மெட்ரிக் தொன் சம்பா அரிசியும் இறக்குமதி செய்யப்படவுள்ளதாகவும் குறித்த அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்தியாவிலுள்ள தனியார் துறையினரிடமிருந்து அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.இறக்குமதி செய்யப்படும் அரிசியை சந்தைக்கு விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு தெரிவித்தது.
Related posts:
சர்வதேச சந்தைக்கேற்ப எரிபொருள் விலையில் மாற்றம்!
அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கும் - நிதி இராஜாங்க அமைச்சர்!
ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் ஈராண்டுகள் நிறைவு – நாடுமுழுவதும் இறந்த உறவகளை நினைவு கூர்ந்து ...
|
|