இந்தியா வழங்கிய கடனின் ஒரு தொகுதி மீளச் செலுத்தப்பட்டது – நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவிப்பு!
Saturday, March 25th, 2023இந்திய கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்பட்ட கடனின் ஒரு தொகுதி மீளச் செலுத்தப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
கேகாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து இலங்கைக்கு கிடைத்த பிணை கடனில் ஒரு தொகுதியே இந்திய கடனுக்காக செலுத்தப்பட்டது.
இதன்படி, 121 மில்லியன் டொலர் இந்தியாவுக்கு மீளச் செலுத்தப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
கிடைக்கப்பெற்றஅரசியல் பலத்திற்கு ஊடாகவே மக்கள் நலன்சார்ந்த செயற்றிட்டங்களை முன்னெடுக்க முடிந்தது–டக்...
வடக்கின் முதல்வருக்கு எதிராக பொலிஸ் தலைமையகத்தில் முறைப்பாடு!
மின்சார கட்டணத்தின் ஒரு பகுதியை அரசாங்கம் பொறுப்பேற்க நடவடிக்கை - பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவிப்பு...
|
|