இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகரின் நியமனம் தொடர்பில் வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது – இந்திய தூதரகம் அறிவிப்பு!
Tuesday, September 7th, 2021இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள அசோக மிலிந்த மொரகொடவின் நியமனத்தினை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என வெளியான செய்தியில் எவ்வித உண்மைத் தன்மையும் இல்லை என கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் கொழும்பில் உள்ள இந்திய உயர் ஸ்தானிகரக பேச்சாளர் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
இந்தியாவிற்கான இலங்கை உயர் ஸ்தானிகராக நியமனம் பெற்று புதுடில்லிக்கு சென்றுள்ள மிலிந்த மொரகொடவின் நியமனச்சான்றினை இந்திய அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என சில தேசிய பத்திரிகைகள் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தன.
இந்தநிலையிலேயே இந்திய உயர் ஸ்தானிகராலயம் அதற்கு மறுப்பு வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
இன்று உலக பத்திரிகை சுதந்திர தினம்
சமுர்த்தி உத்தியோகஸ்தர் தேர்வுக்கான போட்டிப் பரீட்சை அவசர அறிவித்தல்!
பல்கலை மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பம் - தடுப்பூசி ஏற்றல் தேசிய செயற்றிட்டத்தின் க...
|
|