பாடசாலைகளினது 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவு!
Friday, April 11th, 2025
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளினது 2025 ஆம் கல்வி ஆண்டிற்கான முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைகின்றன.
முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் கடந்த முதலாம் திகதி ஆரம்பமான நிலையில் இன்றுமுதல் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது.
முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 21 ஆம் திகதி ஆரம்பிக்கப்படுமென கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அத்துடன், முதலாம் தவணையின் மூன்றாம் கட்ட கல்வி நடவடிக்கை எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளது.
000
Related posts:
ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி அலுவலகத்துக்கு அண்மையில் கைக்குண்டு!
அரசியல் நன்மைகளுக்காக நீதித்துறையை பயன்படுத்த தயாரில்லை - நாமல் ராஜபக்ஷ!
சீனாவின் வர்த்தக சந்தைக்குள் பிரவேசிக்கும் இலங்கை - உலகின் பெறுமதிமிக்க அமைப்புக்களுடன் பாதுகாப்பான ...
|
|
|


