இணையவழி மூலம் கட்டணங்களை செலுத்துங்கள் – தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களிடம் கோரிக்கை!
Wednesday, September 1st, 2021ஒன்லைன் முறையின் கீழ் கட்டணங்களை செலுத்துமாறு தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை பொதுமக்களை கேட்டுள்ளது.
அத்துடன் தகவல்களை 0112 62 36 23 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமாக அறிந்துகொள்ள முடியும் என்றும் அச்சமையின் சபையின் பொது முகாமையாளர் திலின எஸ் விஜயதுங்க தெரிவித்துள்ளார்.
தற்போதைய கொரோனா நிலைமையை கருத்தில்கொண்டு அத்தியாவசிய சேவையாக நீர் வழங்கல் நடவடிக்கையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நெருக்கடிக்கு மத்தியிலும் அவசர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமது சபையின் பணியாளர்கள் தமக்குரிய பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்றி வருவதாக அந்த சபையின் பொது முகாமையாளர் திலின எஸ் விஜயதுங்க மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
000
Related posts:
மக்களது தேவை எதுவோ அதை பெற்றுக் கொடுப்பவர்களாகவே ஈழமக்கள் ஜனநாயக கட்சி இருந்து வருகின்றது - ஈ.பி.டி....
டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம்12 மாவட்டங்களில் அமுலாகின்றது!
யாழ் இந்தியத் தூதுவராக எஸ்.பாலச்சந்திரன் !
|
|