ஆறுகளை அண்மித்துள்ள வீடுகளை அகற்றி நீர் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

Friday, December 17th, 2021

நாட்டில் ஆறுகளை அண்மித்துள்ள வீடுகளை அகற்றி அவற்றை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், நதிகளை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 733 ஆறுகள் மாசடைந்துள்ளதாகவும் அவற்றில் ஆயிரத்து 474 இடங்கள் களனி ஆற்றினை மாசுபடுத்தும் பகுதிகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அதன்படி இம்முறை ‘சுரகிமு கங்கா’ என்ற நதிகளை பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் களனி ஆற்றைச் சுத்தப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..

Related posts:


அரசாங்க ஊழியர்களின் தனிப்பட்ட தகவல்கள் அடங்கிய கடித ஆவணங்கள் இணையத்தில் - அமைச்சர் ஜனக பண்டார!
கடனுக்காக மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடத்துமாறு இந்தியா நிபந்தனையை முன்வைக்கவில்லை - அமைச்சர் டலஸ் ...
மருத்து தட்டுப்பாடு அதிகரிப்பு - யாழ்ப்பாண மக்களிடம் போதனா வைத்தியசாலை வைத்தியர்கள் முன்வைத்துள்ள ...