ஆறுகளை அண்மித்துள்ள வீடுகளை அகற்றி நீர் வளத்தை பாதுகாக்க நடவடிக்கை – சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவிப்பு!

நாட்டில் ஆறுகளை அண்மித்துள்ள வீடுகளை அகற்றி அவற்றை பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், நதிகளை மாசுபடுத்துவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் உள்ள 10 ஆயிரத்து 733 ஆறுகள் மாசடைந்துள்ளதாகவும் அவற்றில் ஆயிரத்து 474 இடங்கள் களனி ஆற்றினை மாசுபடுத்தும் பகுதிகளாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளன.
அதன்படி இம்முறை ‘சுரகிமு கங்கா’ என்ற நதிகளை பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் களனி ஆற்றைச் சுத்தப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது..
Related posts:
பதவி மாற்றம் செய்யப் படுகிறார் பாதுகாப்புச் செயலாளர் !
இதுவரை அவசர சேவைகளில் ஈடுபட்டுவந்த காவுவண்டிகள் இனி நோயாளரை இடமாற்றும்!
அஸ்வெசும கொடுப்பனவுகளை மூன்று மடங்காக அதிகரிக்க நடவடிக்கை - ஜனாதிபதி ரணில் தெரிவிப்பு!
|
|