ஆயிரக்கணக்கான எல்லைதாண்டிய மீனவர்கள் விரட்டியடிப்பு?

Wednesday, November 22nd, 2017

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக கூறப்பட்டு, 1700 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் விரட்டியடிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன..

இராமேஸ்வரம் பகுதியில் இருந்து 75 படகுகளில் கச்சத்தீவுக்கு அருகில் அவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது கடற்படையினர் அவர்களை அங்கிருந்து செல்லுமாறு எச்சரித்து திருப்பி அனுப்பதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இதனால் அவர்கள் மீன்கள் எதனையும் பிடிக்கமுடியாமல் திரும்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: