ஆதாரங்களுடன் ஊழல் மோசடிகள் தொடர்பாக அறிவித்தால் உடனடி நடவடிக்கை – வடக்கின் ஆளுநர் அறிவிப்பு!

Sunday, November 14th, 2021

வடக்கு மாகாணத்தின் அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக ஆதாரங்களுடன் அறிவித்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்களுக்கான சேவைகளை வழங்குவதற்கே அரச கட்டமைப்புக்கள் காணப்படுகின்றன என சுட்டிக்காட்டிய ஆளுநர், தான் பதவியேற்றதில் இருந்து வடமாகாண அரச கட்டமைப்புக்களின் பல்வேறு மட்டங்கள் தொடர்பாக அவதானம் செலுத்தியுள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை அரச கட்டமைப்பில் காணப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பாக சிலர் தன்னைத் தொடர்பு கொள்வதற்கு அல்லது சந்திப்பதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அறிய கிடைத்துள்ளது எனவும் ஆளுநர் தெரிவித்துள்ளார்.

ஆகவே ஊழல், மோசடிகள் தொடர்பாக ஆதராங்களுடன் எவரும் தன்னை நேரடியாக சந்தித்தோ அல்லது தொடர்புக்கொண்டோ தகவல்களை வழங்க முடியும் எனவும் ஆளுநர் ஜீவன் தியாகராஜா குறிப்பிட்டுள்ளார்.

அவ்வாறு தகவல்கள் வழங்கப்படும் பட்சத்தில், உரிய விசாரணைகளை மேற்கொண்டு பாரபட்சமின்றி நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தாம் தயாராக இருப்பதாகவும் வடக்கு ஆளுநர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

000

Related posts: